News
கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் !
கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு புரிய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிறது.
இந்த கொரோனா இத்துடன் முடிய போகிறதா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. இந்த வருடத்திற்குள் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்று கேட்டால் அது ஒரு கேள்வி குறியாக உள்ளது.
இதிலிருந்தே மக்கள் கொரோனாவுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என்று புரிய வேண்டும்.
மேலும், கொரோனா பருவ தொற்றாக மாறும் என்ற அச்சமும் நிலவுகிறது. அதாவது, இந்த வைரஸ் ஆண்டிற்கு ஒருமுறை வந்து பல உயிர்களை காவு வாங்கும் என்ற அச்சமும் மக்களிடையே உள்ளது.
அதற்கு அதிக வாய்ப்புகளும் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
எனவே, எப்போ இந்த ஊரடங்கு முடியும் சமூக விலகல் மற்றும் மாஸ்க் இல்லாமல் வெளியே சுற்றலாம் என்று கருதுவதை மறந்துவிடுங்கள்.
கொரோனாவிற்கு பின் கொரோனாவிற்கு முன் என்று கொரோனாவிற்கு முன்பு உள்ள செயல் முறைகளை மாற்றி அமைத்து அதனை கடைபிடித்து கொரோனாவிற்கு பின் என்று வாழ வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிறது.
Previous article
Next article



very useful & positive
பதிலளிநீக்கு